Thursday, 15 September 2016




                                                          நட்பின் அச்சு 


         நட்பின் அடையாளம்
                  என்றுமே சொல்லாமல் புரிவது
          காதலில் மட்டும் கண்கள் பேசாது
                   நட்பிலும் கண்கள்  பேசும்
          நீ நான் நாம்
                   என காதல் சொல்லும்
          நீ தான் நான் ,நான் தான் நீ
                   என நட்பு சொல்லும்
இங்கு, நாம் என்ற சொல்லுக்கு இடமில்லை
           மனதின் காயத்திற்கு துணையாகுமே காதல்
                  நட்போ அதற்கு மருந்தாகுமே
           காதல் தவறென உணர்ந்தால் பிரியும்
                  நட்போ தவறென உணர்ந்தால் திருத்திக்கொள்ளும்
           மௌன பாஷை காதலுக்கு மட்டுமல்ல
                  நட்பிட்கும் உகந்தது மௌனம்
           அழகை வர்ணிப்பதில் வல்லவன் காதல்
                 அதனை எடுத்துக்காட்டுவதில் வல்லவன் நட்பு
            ஒரு நாள் காதலை காணவில்லை என்றால்
                     மனம் துடித்துப்போகும்
            நட்பினை காணவில்லை என்றால்
                   மனம் சிதறிப்போகுமே
            காதல் நம்பிக்கையில் தொடருவது
                   நட்போ புரிதலில் தொடருவது
           காதலின் அடித்தளம் உணர்வு
                   நட்பின் அடித்தளம் அன்பு
           நட்பிற்கு எல்லையே இல்லை
                   மரணத்தை தொட்டாலும்  எடுத்துக்காட்டாய்
                                                      எப்போதுமே உலகில் பேசப்படும் !!!
                 

                                                   

Saturday, 2 January 2016

                                  
                     மழை துளிகள் 

சூரியன்(karthiga) மலர்ந்தாலே
            நாட்கள் பிறக்கும்
அந்த நாட்கள் களையும் முன்னே
மணித்துளிகள் நம்மோடு இசைத்துவிடும்

இசையை(Aadal) உணர்ந்தாலே
             அளவில்லா(Amitha) ஆனந்தம்
அந்த ஆனந்தம் களையும் முன்னே
அன்பு(Pasupathi) சொற்கள் நம்மோடு ப்ரியம்கொள்ளும்

ப்ரியம்(shanmuga priya) கொண்டாலே
              நினைப்பது எல்லாம் தர்மம்(Dharma)
அந்த தர்மம் களையும் முன்னே
வெற்றி(jeyapradha) நம்மோடு கலந்துவிடும் 

கலந்த பூக்களே 
                    புகழின்(Keerthiga) சரித்திரம்
அந்த புகழ் களையும் முன்னே 
நதி நிலா(Nandhini) நம்மோடு நீந்திவிடும்

நீந்திய நிலவே
              நமக்கு இரவாகும்
அந்த இரவு களையும் முன்னே
நீண்ட கனவுகள்(Mahendran) நம்மோடு நிலைத்துவிடும்

நிலைத்த கனவே
              நமக்கு அமுதம்(Amutha)
அந்த அமுதம் களையும் முன்னே
கண்ணின் லீலைகள் நம்மோடு விளையாடிவிடும்
         (Gopal, mohana krishna)
நடத்திய லீலைகளே
             புல்லங்குழல்(murali) இசைத்துவிடும்
அந்த இசை களையும் முன்னே
உலகை(loga) ஐஸுவர்யம்(ishuwarya) பவனி வந்துவிடும்

பவனி(bhavani) வருமுன்னே
நட்பு சுவாசத்தில் கலந்துவிடும்
இதற்கு எல்லாம் நாங்களே ஒரு முகவரி
முகவரியே எங்கள் முதல் முதல்(11) வரி
முதல்வரியே எங்கள் குரு(thiru) சமுதாயம்(NSS)..........

                                                                                            -Divya meenakshi