Sunday, 26 November 2017




ஒரு உணர்வான பேச்சு


உன் இதயம் துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் என் இதயத்தை உணர்ந்தேன்
உன் கண்கள் சிமிட்டும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் உண்மை உணர்ந்தேன்
உன் மழலை பேச்சு ஒழிக்கும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் இன்னிசையை உணர்ந்தேன்
உன் சிரிப்பினை கண்ட ஒவ்வொரு நொடியிலும்
     நான் முத்துக்களை உணர்ந்தேன்
உன் திறமையை கண்ட ஒவ்வொரு நொடியிலும்
     நான் பெருமையாய் உணர்ந்தேன்
உன் அழகான அன்பினை நீ வெளிப்படுத்திய ஒவ்வொரு நொடியிலும்
     நான் உன்னை உணர்ந்தேன்
உன்னை உணர்ந்தபோது எல்லாம்
     நான் என்னையே உணர்ந்தேன்
என்னிலிருந்து தான் நீ என்பதை
     நான் முழுமையாய் உணர்ந்தேன்
உன்னை என் தோளிலே சுமக்க
     என்றுமே ஆசை தான்
உன்னை காணும் ஒவ்வொரு விடுமுறையிலும்
     எனது கண்கள் இன்பத்தில் துள்ளிக்குதிக்கிறதே
உன்னை பிரியும் ஒவ்வொரு நொடியிலும்
     மறுமுறை உனைக்கான கண்கள் காத்திருக்கிறதே !!!
                                                                ----  ஒரு தாயின் வார்த்தைகள்

Sunday, 19 November 2017



கல்லூரி அன்னை



அலைகள், எங்கோயிருக்கும் சிற்பிகளையெல்லாம்
         கரையில் சேர்ப்பது போல
நீ எங்களை மலர்செண்டிலுள்ள
         மலர்களாய் சேர்த்துவிட்டாய்
சேர்ந்த மலர்களைக் கண்டு
         கண் குளிர்வது போல
நீ எங்களை,  
           சிற்பமாய் செதுக்கிவிட்டாயே

சிற்பங்கள் சிற்பியின் , அன்பின் அடையாளம்
         அத்தகைய மனமார்ந்த அன்பை
நீ எங்களுக்கு,
         அள்ளி தந்துவிட்டாயே

Sunday, 12 November 2017




பறவையின் வேலை தந்திரங்கள்


படிப்பிலுயர நிறுவனத்தில் இணைந்து

விடியல் மணி ஒழிக்க -
          பம்பரமாய் சுழன்று,
        ஆமையான பேருந்தில் பயணித்து,
        பருந்தாக சிறகடித்து,
வெயிலில் பறந்து -
       அறிவு தந்திரங்களை அதிகரிக்க,
       நட்பினை காணாமல் விலகிநின்று,
       பல நிலைகள் புரியாதவாறு,
       மனம் சோகத்திலே தவிக்க,
இரவில் என்றோ ஓர் நாள்-
       காலம் விடியுமென நம்பி,
       விழிகள் மூடி உறங்க,
       நெஞ்சம் மட்டும் - 
          நினைப்பிலேயே துடித்துக்கொண்டிருக்க,
அந்த கணம் நட்பின் சிரிப்புகளே
       நம்மைதாங்கும்  உயிராக துடிக்கும்

ஆறு மாதக்காலத்திக்கு பின்
     அழகிய பறவைகளின் இதயங்களை எல்லாம்
        வேடந்தாங்களின் கதவுகள் திறக்கும் -
           நிமிடத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது .........

*******************************************************************************
  இன்பத்தின் விடியலே வாழ்வின்-
                            அழகான நினைவுகளை செதுக்கிவிடும்.
*******************************************************************************