Sunday, 26 November 2017




ஒரு உணர்வான பேச்சு


உன் இதயம் துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் என் இதயத்தை உணர்ந்தேன்
உன் கண்கள் சிமிட்டும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் உண்மை உணர்ந்தேன்
உன் மழலை பேச்சு ஒழிக்கும் ஒவ்வொரு நொடியிலும்
     நான் இன்னிசையை உணர்ந்தேன்
உன் சிரிப்பினை கண்ட ஒவ்வொரு நொடியிலும்
     நான் முத்துக்களை உணர்ந்தேன்
உன் திறமையை கண்ட ஒவ்வொரு நொடியிலும்
     நான் பெருமையாய் உணர்ந்தேன்
உன் அழகான அன்பினை நீ வெளிப்படுத்திய ஒவ்வொரு நொடியிலும்
     நான் உன்னை உணர்ந்தேன்
உன்னை உணர்ந்தபோது எல்லாம்
     நான் என்னையே உணர்ந்தேன்
என்னிலிருந்து தான் நீ என்பதை
     நான் முழுமையாய் உணர்ந்தேன்
உன்னை என் தோளிலே சுமக்க
     என்றுமே ஆசை தான்
உன்னை காணும் ஒவ்வொரு விடுமுறையிலும்
     எனது கண்கள் இன்பத்தில் துள்ளிக்குதிக்கிறதே
உன்னை பிரியும் ஒவ்வொரு நொடியிலும்
     மறுமுறை உனைக்கான கண்கள் காத்திருக்கிறதே !!!
                                                                ----  ஒரு தாயின் வார்த்தைகள்

No comments:

Post a Comment