சிற்பி
மேகக்கூட்டங்கள் சூழ்ந்து , கார்மேகமாக மாறி
மழை பொழிந்து, மக்களை மகிழ்விப்பதுபோல
எங்கள் ஆசிரியர்கள் அவர்களது
திறனை பொழிந்து,
மாணாக்கர்களாகிய எங்களுக்கு
வெற்றிப்பாதையை வழிகாட்டி,
நாங்கள் செய்யும்
நற்செயலை பாராட்டி,
தீயசெயலை கண்டித்து,
எங்கள் திறனை வெளிக்கொணர்ந்து,
இந்த உலகமே -
எங்களை தலைசிறந்த மனிதனாய் பார்க்க
வழிகாட்டிய ஆசான்களுக்கு நன்றிகள்
வானத்திலுள்ள நட்சத்திரமாய் -
என்றுமே எம் நினைப்பிலிருக்கும்,
ஆசான்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!
No comments:
Post a Comment