எனக்குள் என் அம்மா
கண்ணை திறந்தால் நீ இல்லை
கண்ணை மூடினால் நீ இருக்கிறாய்
உன்னை நினைத்தால் இதையதுடிபும்
அதிவேகமாக துடிக்கிறது
ஒரு நிமிடமும் உன்னை பிரிய
மனம் நினைத்ததில்லை
கொலுசொலி கேட்டால் நீ தானோ
என கண்கள் தேடிபார்கிறது
என் இமையும் இமைக்காமல் உன்னை
அங்கும் மிங்கும் தேடுகிறது
கண் இமைக்கும் நேரத்தில்
மின்னல் வெட்டும் நேரத்தில்
உன் கொலுசொலி கேக்காமல் போகுது
அப்போதான் தெரியுது
நான் தான் நீ ...
நீதான் நான் ... என
நீ என்னக்கு உயிர் தந்தாய்
நான் உன்னை எனக்குள் கண்டேன்
அம்மா நீ என்றால்
என்னை தாங்கிய உயிர்
நான் என்றால்
உன்னை தாங்கும் உயிர்தானோ என
என்னை சிலிர்கவைத்தது என் மனம் ....
No comments:
Post a Comment