Tuesday, 8 December 2015


                    


              எனக்குள்  என்  அம்மா 

கண்ணை  திறந்தால்  நீ  இல்லை 
      கண்ணை  மூடினால்  நீ  இருக்கிறாய் 
உன்னை  நினைத்தால் இதையதுடிபும்
       அதிவேகமாக  துடிக்கிறது 
ஒரு  நிமிடமும்  உன்னை  பிரிய 
       மனம்  நினைத்ததில்லை 
கொலுசொலி  கேட்டால்  நீ  தானோ 
        என  கண்கள்  தேடிபார்கிறது 
என்  இமையும்  இமைக்காமல்   உன்னை 
         அங்கும்  மிங்கும் தேடுகிறது
கண்  இமைக்கும்  நேரத்தில் 
மின்னல்  வெட்டும்  நேரத்தில் 
         உன்  கொலுசொலி  கேக்காமல் போகுது 
அப்போதான்   தெரியுது  
       நான்  தான்  நீ ...
        நீதான்  நான் ... என 
நீ  என்னக்கு  உயிர்  தந்தாய்
        நான்  உன்னை  எனக்குள்  கண்டேன் 
அம்மா  நீ  என்றால்  
         என்னை  தாங்கிய  உயிர் 
நான்  என்றால் 
         உன்னை  தாங்கும்  உயிர்தானோ என  
         என்னை  சிலிர்கவைத்தது  என்  மனம் ....

  










   

No comments:

Post a Comment